கனடாவில் முஸ்லீம் குடும்பத்தின் மீது திட்டமிடப்பட்ட வாகனதாக்குதல்; நால்வர் பலி
கனடாவில் முஸ்லீம் குடும்பமொன்றின் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட டிரக் தாக்குதலில் அந்த குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
லண்டன் நகரில் பாதசாரிகள் மீது நதனியல் வெல்ட்மன் என்ற 20 வயது நபர் வேண்டுமென்றே மோதியதில் 74 மற்றும் 44வயதுடைய இரு பெண்களும், 46 வயது நபரும் 15 வயது சிறுமியும் கொல்லப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒன்பது வயது சிறுவன் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்கள் இலக்குவைக்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
I’m horrified by the news from London, Ontario. To the loved ones of those who were terrorized by yesterday’s act of hatred, we are here for you. We are also here for the child who remains in hospital - our hearts go out to you, and you will be in our thoughts as you recover.
— Justin Trudeau (@JustinTrudeau) June 7, 2021
தப்பியோடி இளைஞனை கைதுசெய்தவேளை அவர் உடற்கவசம் போன்ற ஒன்றை அணிந்திருந்தார்,என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த பீட்டர் மாட்டின் என்பவர் நான் முதலில் இது மோசமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து என கருதினேன் என தெரிவித்துள்ளார்.
நான் அருகில் சென்று பார்த்ததும் பொலிஸாரையும் உடல்கள் நிலத்தில் காணப்படுவதையும் பார்த்தேன், அந்த நேர கதறல்களில் இருந்து என்னால் விடுபட முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நான் எனது மகள் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பார்க்கமுடியதவாறு அவளை மறைத்துக்கொண்டேன் என ஒருவர் தெரிவித்துள்ளார். 2017ன் பின்னர் கனடாவில் முஸ்லீம்களிற்கு எதிராக இடம்பெற்ற மோசமான சம்பவம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
