கனடாவில் சிறப்பு சமூக நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய
கனடாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் “டாக்டர் ஹரிணி அமரசூரியவுடன் ஒரு மாலை” என்ற சிறப்பு சமூக நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
இலங்கை பிரதமர் அலுவலகத்தின்படி, இந்த நிகழ்வு மதத் தலைவர்களுக்கும் இலங்கை வம்சாவளி சமூக உறுப்பினர்களுக்கும் பிரதமருடன் தொடர்பு கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது.
வான்கூவரில் நடைபெறும் காமன்வெல்த் கற்றல் (COL) ஆளுநர்கள் வாரியக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அமரசூரிய செவ்வாய்க்கிழமை கனடா வந்தடைந்தார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு, காமன்வெல்த் கற்றல் அமைப்பு மற்றும் ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், குளோபல் அஃபேர்ஸ் கனடாவின் ஒருங்கிணைப்பு குழுவினரும் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை அன்புடன் வரவேற்றனர்.