கனடிய எதிர்க்கட்சித் தலைவரின் பாரதூரமான குற்றச்சாட்டு
கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே முன்னாள் பிரதமர் பொலிஸார் மீது பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது வழக்குகள் தொடரப்பட்டிருக்க வேண்டிய பல விவகாரங்களில் கனடிய பொலிஸார் சம்பவங்களை மூடி மறைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ ஆட்சியில் நடந்த பல ஊழல்கள் சிறைத் தண்டனைக்குரியவை எனவும் பொலிஸ் தலைமைகளின் செயற்பாடு அவமானத்திற்குரியது எனுவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் ட்ரூடோவின் குற்றச் செயல்களை பொலிஸார் கண்டு கொள்ளவில்லை எனவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனுவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.