கழிப்பறையில் 12 வயது சிறுமியை துஸ்பிரயோகித்த 82 வயது நபர் கைது
கழிப்பறையில் வைத்து 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 82 வயதான நபர் ஒருவரை றொரன்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏர்ல் ஸ்டுவர்ட் மற்றும் பய்விவ் அவன்யூ பகுதியில் அமைந்துள்ள ரெஸ்டுரன்ட் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உணவு உட்கொண்டிருந்த குறித்த சிறுமி ரெஸ்டுரன்ட்டின் கழிப்பறைக்கு சென்ற போது, இனந்தெரியாத நபர் ஒருவரினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீ.சீ.ரீ.வி காணொளியின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேக நபர் பற்றிய விபரங்களையும் வெளியிட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் பொதுமக்களின் உதவியுடன் 82 வயதான மிர் மிர்ஸாய் என்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொதுமக்களிடம் கோருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.