விடாது துரத்திய பொலிஸ்: விபத்தில் சிக்கி கொல்லப்பட்ட பெண்
பிரிட்டனின் எசெக்ஸ் பகுதியில் பெண் சாரதி ஒருவர் விடாது துரத்திய பொலிசாரால் விபத்தில் சிக்கி பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்.
எசெக்ஸ் பகுதியில் நள்ளிரவு 2.30 மணியளவில் A13 சாலையில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது அல்லது எந்த வாகனம் என்பது தொடர்பான எவ்வித தகவலும் பொலிசார் வெளியிடவில்லை.
வெளியான புகைப்படங்களில் இருந்து, அது ஒரு கொடூரமான விபத்து என்றே கூறப்படுகிறது. மேலும், பொலிசார் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதால், உரிய அதிகாரிகள் தரப்பும் இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.
எசெக்ஸ் பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், நள்ளிரவு 2.30 மணியளவில் A13 சாலையில் வாகனம் ஒன்று நிறுத்தாமல் சென்றதாகவும், இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் அந்த வாகனத்தை தொடர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாகனமானது இன்னொரு வாகனத்துடன் மோதியதாகவும், உயிர் காக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், அந்த பெண் சாரதி மரணமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.