இளைஞரை அடையாளம் கண்ட ரொறன்ரோ பொலிசார்
நார்த் யார்க்கில் உள்ள பரபரப்பான பிளாசாவில் துப்பாக்கி குண்டுக் காயத்துடன் மீட்கப்பட்ட இளைஞரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நார்த் யார்க்கில் அமைந்துள்ள Crossroads Centre பிளாசாவில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சுமார் 3.40 மணியளவில் சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், 24 வயது இளைஞர் துப்பாக்கி கூண்டு காயங்களுடன் வாகனம் ஒன்றில் காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர்..
இதனிடையே, பரிசோதித்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர், குறித்த இளைஞர் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திங்களன்று ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், குறித்த இளைஞர் ரொறன்ரோவை சேர்ந்த Mathio Youkhanna என அடையாளம் கணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த வேளையில், குறித்த பிளாசாவில் பலர் காணப்பட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் சாட்சிகள் முன்வந்து பொலிசாருக்கு உதவுவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், எவரேனும் குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்திருந்தால், பொலிசாருக்கு தந்துதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.