சடலமாக மீட்கப்பட்ட பெண்: துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தும் பீல் பொலிசார்
மிசிசாகா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பீல் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Ninth Line மற்றும் Burnhamthorpe சாலை மேற்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே இரவு 11:40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய கான்ஸ்டபில் Akhil Mooken, பொதுமக்களிடம் இருந்து குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பலமுறை 911 இலக்கத்திற்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார், துப்பாக்கி குண்டு காயங்களுடன் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.
ஆனால் சம்பவயிடத்தில் வைத்தே குறித்த பெண் மரணமடைந்ததாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல் எதையும் தற்போது வெளியிட முடியாது என குறிப்பிட்டுள்ள Akhil Mooken, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டும் தெரிவித்துள்ளார்.