பொலிஸ் காவலில் மரணமடைந்த பெண்மணி: வெளியான காரணம்
கல்கரியில் பொலிஸ் காவலில் இருந்த 34 வயது பெண்மணி மரணமடைந்துள்ள சம்பவம் சிறப்பு குழுவினரால் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் 34 வயது பெண்மணி ஒருவர் பொது மக்களிடையே பிரச்சனை செய்வதாக கூறி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். ஆனால் பொலிஸ் காவலில் இருக்கும் போதே குறித்த பெண் நள்ளிரவு கடந்த நேரம் மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதன்கிழமை உடற்கூராய்வுகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும், அதன் பின்னரே அவரின் மரண காரணம் தெரிய வரும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.