கனடாவில் கொத்தாக 22 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: வெளிச்சத்துக்கு வரும் புதிய தகவல்
கனடாவின் நோவா ஸ்கொடியாவில் 22 பேர் கொத்தாக கொல்லப்பட்ட விவகாரத்தில் பொது விசாரணை குழு புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2020 ஏப்ரல் மாதம் போலியான பொலிஸ் வகனம் ஒன்றில் மாகாணம் முழுவதும் சுற்றிவந்து மொத்தம் 22 பேர்களை கொன்றுள்ளார் அந்த துப்பாக்கிதாரி.
இறுதியில் பொலிசார் அவரை அடையாளம் கண்டு, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், தாமே தலையில் சுட்டுக்கொண்டுள்ளார். பொலிசார் அந்த நபர் மீது 23 தோட்டாக்கள் வரையில் சுட்டுள்ளனர். இதில் அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
மருத்துவர்களும், பொலிசார் சுட்டதாலையே அவர் மரணமடைந்துள்ளதையும் உறுதி செய்துள்ளனர். திருடிய வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப முயன்ற நிலையில், அவரை அடையாளம் கண்ட பொலிசார், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அதற்கு முன்னர் பெண்கள், முதியவர்கள் உட்பட 22 அப்பாவி பொதுமக்களை அவர் சாதாரணமாக துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
மருத்துவர்கள் முன்னெடுத்த பரிசோதனையில், அந்த நபரது தலையில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும், கழுத்து, மார்பு, வயிறு மற்றும் கைகளில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தலையில் தாக்கிய ஒரு துப்பாக்கி குண்டு அவரை நிலைகுலைய செய்திருக்கலாம் எனவும், ஆனால் அதுவே அவர் மரணத்திற்கு காரணமல்ல எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.