கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமற் போயுள்ளதாக ரொறன்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் (29) என்ற இளைஞரே காணாமற் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
காணமல்போனவர் கடைசியாக ஜனவரி 15, 2022 அன்று மதியம் 12:10 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ட்ரெத்வீ டிரைவ் பகுதியில் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த இளைஞர் குட்டையான கருப்பு முடி, தாடி மற்றும் பழுப்பு நிற கண்களுடன் காணப்படுவார் எனவும், அவர் கருப்பு நிற குளிர்கால ஜாக்கெட், அணிந்திருந்தார்.
அவர் கடைசியாக சிவப்பு நிற CFMK 918 என்ற உரிமத் தகடு கொண்ட சாம்பல் நிற டொயோட்டா கேம்ரியை ஓட்டிச் சென்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை காணாமற்போனதாக கூறப்படும் குறித்த இளைஞர் பிரசாந்தி அருச்சுனன் என்ற யுவதி இவருடன் இருக்கலாம் என கனேடிய விசாரணையாளர்கள் நம்புகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.