சிறுவன் விவகாரம்... ஐவரின் புகைப்படம் வெளியிட்ட ரொறன்ரோ பொலிசார்
ரொறன்ரோ நகரில் சிறுவனை கத்தியால் தாக்கி கொள்ளையிட்ட விவகாரத்தில், சந்தேக நபர்கள் ஐவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலில் 15 வயதேயான சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளான். ஜூலை 6ம் திகதி நள்ளிரவு 12.30 கடந்த நிலையில் பே ஸ்ட்ரீட் மற்றும் ஹேகர்மேன் தெருவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சிறுவன் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில் குறித்த ஐவரும் சிறுவனை எதிர்கொண்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளான்.
தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் வாகனம் ஒன்றில் சம்பவ பகுதியில் இருந்து மாயமாகினர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஐவரும் ஆயுததாரிகள் எனவும், வன்முறையாளர்கள் எனவும் ஆபத்தானவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.