புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களின் உதவி கோரிய கனேடிய பொலிசார்
கனடாவில் 15 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் கல்கரி பொலிசார்.
கடந்த ஆகஸ்ட் 24ம் திகதி 15 வயதேயான Aaliyah Manyheads திடீரென்று மாயமானார். 5 அடி 8 அங்குலம் கொண்ட அவர் காணாமல் போன நாளில் கருப்பு, மெரூன் மற்றும் வெள்ளை நிறங்களில் உடை அணிந்திருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், குறித்த சிறுமி மாயமானதில் சதித்திட்டம் ஏதும் கண்டறியப்படவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இதுவரை துப்புத்துலங்கவில்லை என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, அம்பர் எச்சரிக்கை விடுக்கப்படும் அளவுக்கு தீவிரத்தன்மையுடைய வழக்காக இது கருதவில்லை எனவும்,
இருப்பினும் தீவிரமாகவே இந்த விவகாரத்தில் விசாரணை முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி விவகாரத்தில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.