பிரித்தானிய எம்.பி. கொல்லப்பட்ட விவகாரம்: அச்சத்தில் கனேடிய அரசியல்வாதிகள்
பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் எம்.பி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், கனடாவிலும் அரசியல் வன்முறை அதிகரித்து வருவதாக அரசியல்வாதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் எம்.பி சர் டேவிட் அமெஸ் தமது தொகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஏற்பட்டிருந்த நிலையில் இளைஞர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி, குறித்த இளைஞர் 17 முறை டேவிட் அமெஸ் எம்.பியை குத்தியுள்ளார். இதில் குற்றுயிராக மீட்கப்பட்ட டேவிட் அமெஸ், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தாக்குதல் முன்னெடுத்த இளைஞர் சோமாலியா வம்சாவளியை சேர்ந்தவர் எனவும், இஸ்லாமிய தீவிரவாதத்தில் ஈர்ப்பு கொண்டவர் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 ஆண்டுகள் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட சர் டேவிட் அமெஸ் கொல்லப்பட்ட விவகராம், எம்.பியாக தெரிவாகி மக்களுக்காக பணியாற்றுபவர்களுக்கான திடுக்கிடும் நினைவூட்டல் என கனேடிய அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கும் துன்புறுத்தல் மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையிலேயே கனேடிய அரசியல்வாதிகள் குறித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கனேடிய கன்சர்வேட்டிவ் எம்.பி Rempel Garner தெரிவிக்கையில், ஒருமுறையல்ல பல முறை பொதுமக்களிடம் இருந்து துன்புறுத்தலும் கொலை மிரட்டலும் எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசியல் சூழல் அல்ல தற்போது என்பதை தாம் நன்கு உணர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த முறை பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்டதைவிட பாதுகாப்பற்ற நிலையை ஒருபோதும் இதற்கு முன்னர் உணர்ந்தது இல்லை என்கிறார்.
புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.