29 வார கர்ப்பிணிக்கு கொரோனா: மருத்துவமனையில் இருந்து குடும்பத்தாருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்
கனடாவில் கர்ப்பிணி தாயார் ஒருவர் கொரோனாவால் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில், சுய நினைவு திரும்பாமலே மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எட்மண்டன் பகுதியில் வசித்து வந்த 35 வயது Rosebluff-Thomas என்பவரே அவசர சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பிறகு மரணமடைந்தவர். 8 பிள்ளைகளின் தாயாரான Rosebluff-Thomas 29 வார கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையில், கொரோனா பாதிப்பு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நிலைக்கு தள்ளியது. இந்த நிலையில், ராயல் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் இருந்து அவரது உறவினர்களுக்கு அவசர அழைப்பு வந்துள்ளது.
Rosebluff-Thomas என்பவரின் நிலை ஆபத்து கட்டத்தில் இருப்பதாகவும், உடனடியாக சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
ஆனால் 9வது பிள்ளைக்கு தாயான நிலையில், அவர் சுய நினைவுக்கு திரும்பாமலையே மரணமடைந்துள்ளார். Rosebluff-Thomas மரணமடைந்துள்ளது அவரது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
மட்டுமின்றி பல முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியும் அவர் தாமதப்படுத்தி வந்ததாகவே கூறப்படுகிறது.