நாடொன்றில் கர்பிணிப்பெண்ணிற்கு நேர்ந்த கதி; பதறவைக்கும் சம்பவம்!
பிரேசில் நாட்டிலுள்ள ஸா பாலோ என்ற மாகாணத்தில், ஓஹானா கரோலின்(Ohana Karolin) (24) என்ற இளம்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது வயிறு கிழிக்கப்பட்டு, அவரது வயிற்றிலிருந்த ஏழு மாதக் குழந்தை அகற்றப்பட்டிருந்த நிலையில் சடலமாக ஓஹானா கரோலின்(Ohana Karolin) கண்டெடுக்கப்பட்ட விடயம், அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் நிலை என்ன என்று தெரியவில்லை. ஓஹானா கரோலின்(Ohana Karolin)சமீபத்தில்தான் தனது கணவரைப் பிரிந்து புதிய காதலர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்த நிலையில், இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
பயங்கரமான ஒரு கூட்டத்துடன் ஓஹானா கரோலின்(Ohana Karolin)சுற்றிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள அவரது தோழி ஒருவர், அதனாலேயே அவரது நண்பர்கள் பலர் அவரைவிட்டு தூர விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது பொலிஸார் இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.