பலரையும் ஆச்சர்யப்படுத்திய பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) நள்ளிரவில் வீதி ஒன்றில் தனியே நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பாரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் உள்ள புகழ்பெற்ற Rue de Rivoli வீதியில் மக்ரோன் (Emmanuel Macron) நடந்து செல்லும் போது மேற்படி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 19 ஆம் திகதி அன்று, இரவு 11.30 மணி அளவில் இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) எவ்வித பாதுகாப்பும் இன்றி - மெய்பாதுகாவலர்களும் இல்லாமல் தனியே நடந்து சென்றுள்ளார்.
இதன்போது பாதசாரி கடவையில் மக்ரோன் (Emmanuel Macron) தொலைபேசியில் உரையாடிக்கொண்டு செல்வது போன்ற குறித்த புகைப்படத்தை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ புகைப்படக்கலைஞர் Soizic de la Moissonnière படம் பிடித்துள்ளார்.
அதன் பின்னர் அவரே தனது இன்ஸ்டகிராம் சமூகவலைத்தள கணக்கினூடாக மே 30 ஆம் திகதி அன்று பகிர்ந்திருந்தார்.
அதேவேளை ஜனாதிபதி (Emmanuel Macron) மெய்பாதுகாவலர்கள் இல்லாமல் தனியே சென்றமை பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.