கனடாவில் அருட்தந்தை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஹால்டன் பிராந்திய காவல்துறை (Halton Regional Police), கடந்த பெப்ரவரி தொடக்கத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த விசாரணையைத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளது.
காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஓக்வில்லையைச் சேர்ந்த 53 வயதான ரஞ்சன் டி’சா (Rev. Ranjan D’Sa) என்பவர் மீது ஒரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் 2016-ஆம் ஆண்டு முதல் புனித டொமினிக் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் (St. Dominic’s Roman Catholic Church) பணியாற்றி வருகிறார்.

இவர் 2010-ஆம் ஆண்டு முதல் மதகுருமார்கள் குழுவில் (Clergy) உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்தச் சம்பவத்தில் இன்னும் கூடுதல் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும் எனத் தாங்கள் கவலைப்படுவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகத் தங்களை அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' (Crime Stoppers) அமைப்பைத் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஹாமில்டன் மறைமாவட்டத்திடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.