இந்திய வம்சாவளி அமைச்சர் மீது கடும் கோபத்தில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்!
பிரித்தானியாவின் திறைசேரி அமைச்சர் ரிஷி சுண்ணக் (rishi sunak)ஒரு இந்திய வம்சாவழி அரசியல்வாதி ஆவார். அவர் கொண்டு வரும் திட்டங்கள், பிரித்தானிய மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ரிஷி(rishi sunak), பிரதமர் பொரிஸ் ஜோன்சனிற்கு (boris johnson)எழுதிய கடிதம் ஒன்று ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தாலும், அது கசிந்து விட்டது. அதில் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்து அமுல் படுத்தினால், நாட்டின் பொருளாதாரம் கெட்டுப் போய் விடும் என்று அவர் கூறி, பல விடையங்களை கோடிட்டு காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த கடிதம் மீடியாக்களில் கசிந்ததனால் தான் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (boris johnson) கடுமையாக ஆத்திரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு திறைசேரி அமைச்சராக வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் பிரதமர் பொறிஸ் (boris johnson) ஆராய்ந்து வருகிறாராம்.
இதேவேளை பிரித்தானியாவில் கொரோனா தலை விரித்து ஆடிய கால கட்டத்தில், ரிஷி சுண்ணக் (rishi sunak)சுமார் 400 பில்லியன் பவுண்டுகளுக்கு பல திட்டங்களை போட்டு, மக்களுக்கு பல உதவிகளை அறிவித்தார். இதன் காரணமாக பிரிட்டன் மக்களிடையே ரிஷி சுண்ணக்கிற்கு (rishi sunak) 74% சத விகித செல்வாக்கு உயர்ந்துள்ள அதேவேளை பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் (boris johnson) செல்வாக்கு சரிவடைந்து தற்போது 34% சத விகிதத்தில் உள்ளாராம்.
இதன் காரணமாகத்தான் அவர் கடுப்பாகி, எப்படி என்றாலும் ரிஷியை பதவியில் இருந்து தூக்குவது என்ற முடிவை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பதவியில் இருந்து சுண்ணக்கை (rishi sunak) தூக்கினால் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் (boris johnson) செல்வாக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.