சுவீடன் வரலாற்றில் முதன்முதலாக வெளியேற்றப்பட்ட பிரதமர்!
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியுற்றதையடுத்து சுவீடன் பிரதமர் ஸ்டேபன் லோவியன் (Stefan Löfven)இன்று இராஜினாமா செய்துள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்படும் தொடர்மாடிக் குடியிருப்புகளுக்கான வாடகை உச்ச வரம்பு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, சுவீடனின் ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து,ஸ்டேபன் லோவியன் (Stefan Lofven )தலைமை வகிக்கும் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்துக்கான தனது ஆதரவை இடதுசாரி கட்சி வாபஸ் பெற்றிருந்ததையடுத்து பிரதமர் ஸ்டேபன் லோவியனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
கடந்த வாரம் சுவீடன் நாடாளுமன்றத்தின் 349 எம்.பிகளில் 181 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் 51 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இவ்வாக்கெடுப்பில் தோல்வியுற்றதையடுத்து, ஒரு வாரத்துக்குள் இராஜினாமா செய்வது அல்லது பொதுத்தேர்தலை நடத்தக் கோருவது ஆகிய இரு தெரிவுகள் பிரதமர் லோவியன் முன்னிலையில் இருந்தன.
இந்நிலையில், திடீர் தேர்தலை நடத்துவது சுவீடனுக்கு நல்லதல்ல என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஸ்டேபன் லோவியன் (Stefan Lofven தெரிவித்தார்.
அவரின் இராஜினாமாவையடுத்து புதிய பிரதமர் ஒருவரை தேடும் நடவடிக்கையை சுவீடன் சபாநாயகர் ஆரம்பிக்கவுள்ளார்.
இதேவேளை சுவீடன் வரலாற்றில் பிரதமர் ஒருவர் மூலம் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெளியேற்றப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.