இளவரசர் பிரின்ஸ் மீதான கற்பழிப்பு வழக்கில் அதிரடி திருப்பங்கள்
பிரித்தானியா ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், இளவரசருமான பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை நியூயார்க் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ மீது அமெரிக்காவை சேர்ந்த விர்ஜீனியா ஜிப்ரே என்ற பெண் பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்ததாகவும், அப்போது அவருக்கு ஜெப்ரி எப்ஸ்டின் என்பவர் தனது காதலியான விர்ஜீனியா ஜிப்ரே என்ற இளம்பெண்ணை அறிமுகப்படுத்தியதாகவும்,
அந்த சந்தர்ப்பத்தில் விர்ஜீனியாவுக்கு, இளவரசர் ஆண்ட்ரூ தொல்லை கொடுத்து கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது.
அந்நேரத்தில் சுமார் 17 வயதேயான விர்ஜீனியாவை இளவரசர் ஆண்ட்ரூ உறவு கொண்டதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது 37 வயதாகும் விர்ஜீனியா நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தொடர்ந்து 10 நிமிடங்கள் நேற்று விசாரணை நடந்த நிலையில், அடுத்த விசாரணையை 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே விர்ஜீனியாவின் காதலர் ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.