இளவரசர் வில்லியம்- கேட் தம்பதி எடுத்துள்ள அதிரடி முடிவு!
வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியாக பிரமாண்ட முடிசூட்டும் விழா முன்னெடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என வில்லியம்(Prince William)- கேட்(princes Catherine) தம்பதி தெரிவித்துள்ளனர்.
மாறாக மக்களிடம் மரியாதை மற்றும் நம்பிக்கையை பெற உழைக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். அது மட்டுமின்றி, எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் மீண்டும் ஒருமுறை வேல்ஸ் மக்களை சந்திக்க தாங்கள் திரும்ப இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இளவரசர் வில்லியத்தின் தந்தை சார்லஸ் தாம் வேல்ஸ் இளவரசராக முடிசூட்டிக்கொண்ட போது அதற்கான விழாவானது Caernarfon கோட்டையில் முன்னெடுக்கப்பட்டதுடன், ஊடகங்களிலும் நேரலை செய்யப்பட்டது.
இளவரசர் சார்லஸ்(King Charles III) தமது 20 வயதில் வேல்ஸ் இளவரசர் பட்டத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் தற்போதைய சூழலில், அவ்வாறான முடிசூட்டும் விழா என்பது பழமையான ஒன்றாக இளவரசர் வில்லியம் (Prince William) மற்றும் கேட் (princes Catherine)தம்பதி கருதுவதாக கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி, வில்லியம்- கேட் தம்பதி தங்கள் திருமணம் முடித்து Anglesey பகுதியிலேயே முதலில் குடியிருந்து வந்தனர்.
ராணியார் காலமான தகவல் உறுதி செய்யப்பட்ட 24 மணி நேரத்தில், மன்னர் சார்லஸ்(King Charles III) வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியாக வில்லியம்(Prince William) - கேட் (princes Catherine) தம்பதியை தெரிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
மன்னர் சார்லஸ் (King Charles III)தனது 9வது வயதில் வேல்ஸ் இளவரசராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அவரது 20வது வயதிலேயே முடிசூட்டும் விழாவானது முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது செய்தி ஊடகங்களில் நேரலை செய்யப்பட்டது. மில்லியன் கணக்கான மக்கள் அந்த நிகழ்வுகளை பார்வையிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.