பாடசாலைகளை திறக்க தயக்கம் காட்டும் முதல்வர் டக் போர்ட்
இந்த கல்வியாண்டு முழுவதற்கும் பாடசாலைகளை மூடுவதற்கு ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் (Doug Port)திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து ஒன்ராறியோ அமைச்சரவை இன்னமும், முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு, தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் ஒன்ராறியோவின், விஞ்ஞான ஆலோசனை அட்டவணை என்பன ஆதரவு வெளியிட்டிருந்தனர். எனினும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, குழந்தைகளை வகுப்பறைகளுக்கு அனுமதிக்க டக் போர்ட் (Doug Port)தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை அரசாங்கத்தின் ஆலோசனை மற்றும் முன்னுரிமைக் குழுவின் கூட்டம் திங்கட்கிழமை இடம்பெற்ற போது, பிராந்திய மட்ட அடிப்படையில் கூட பாடசாலைகளை மீளத் திறக்க அனுமதிக்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.