சிறையிலிருந்து தப்பி நீரில் மூழ்கி இறந்த கைதி
பொலிஸாரிடமிருந்து தப்ப ஆற்றில் பாய்ந்து கைதி உயிரிழந்துள்ளார்.
செயின்ட் மிஹில் சிறைச்சாலையிலிருந்து கடந்த ஜூலை மாதம் கைதி ஒருவர் தப்பியுள்ளார். இந்த நிலையில் தப்பிய கைதியை பொலிஸார் செயின்ட் மாக்ஸ் நகரில் வைத்து மீண்டும் கைது செய்ய முயற்சித்தனர்.
அந்த சமயத்தில் அவன் பொலிஸாரிடமிருந்து தப்பிக்க அருகிலிருந்த ஆற்றுக்குள் குதித்துள்ளான்.
ஆனால் அவனால் அந்த ஆற்றுக்குள் குதித்து தப்ப முடியவில்லை. அவனை காப்பாற்ற போலீசார் முயற்சித்தும் அது தோல்வியடைந்தது.
இது தொடர்பில் விசாரணைகளை நான்சி குற்றவியல் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.