கனடாவில் இன்று காலை தொடர்ச்சியாக கேட்ட துப்பாக்கி சுடும் சத்தம்... பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
கனடாவில் இன்று காலை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கியூபெக்கிலுள்ள Laval என்ற இடத்தில் தொடர்ச்சியாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக பலர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், தனது 20 வயதுகளிலிருக்கும் இளைஞர் ஒருவர் குண்டுக்காயங்களுடன் கிடப்பதைக் கண்டுள்ளனர். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அங்கு துப்பாக்கிக் குண்டுகளோ, அக்கம்பக்கத்தில் நின்ற கார்கள் மற்றும் வீடுகளில் குண்டு பாய்ந்த அடையாளமோ காணப்படவில்லை.
பின்னர், கேங் உறுப்பினர்களுக்கிடையே நடந்த மோதலில் அவர் உயிரிழந்திருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். விசாரணை தொடர்கிறது.