லொட்டரியில் 35 மில்லியன் டொலரை அள்ளிய ரொறன்ரோ மாணவர்
ரொறன்ரோ கல்லூரி மாணவர் ஒருவர் லொட்டரியில் 35 மில்லியன் டொலரை மொத்தமாக அள்ளியுள்ளார்.
ரொறன்ரோ பகுதியை சேர்ந்த 29 வயதான Ginno Torres என்பவரே லொட்டரியில் 35 மில்லியன் டொலரை பரிசாக வென்றவர். ஜூன் 22ம் திகதி வாங்கிய லொட்டரியில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தவர் ஒருவருடன் மொத்த பரிசு தொகையான 70 மில்லியன் டொலர் தொகையை Ginno Torres சரி பாதியாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
தாம் லொட்டரியில் பரிசு வென்றது உண்மைதானா என்பதை உறுதி செய்த பின்னரே குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளதாக Ginno Torres குறிப்பிட்டுள்ளார்.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, லொட்டரி வாங்கிய கடைக்கு சென்றதாகவும், தமது கண்களையே தம்மால் நம்ப முடியவில்லை எனவும் Ginno Torres தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இன்னொரு கடைக்கு சென்று, லொட்டரி முடிவுகளை உறுதி செய்த பின்னரே, தமக்கு 35 மில்லியன் பரிசு கிடைத்துள்ளதை நம்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
லொட்டரி தொகையை என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் ஆழமாக யோசிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் தமது குடும்பத்தினர் ஏற்கனவே பட்டியல் ஒன்றை இறுதி செய்துள்ளதாகவும் Ginno Torres குறுப்பிட்டுள்ளார்.