உக்ரைன் மக்களை பொதுவெளியில் தூக்கிலிட புதின் திட்டம்; அம்பலமான அதிர்ச்சித்தகவல்!
உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்க அவர்களை பொதுவெளியில் தூக்கிலிட ரஷ்யா திட்டமொன்றை இனிவரும் நாட்களில் முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உக்ரைன் மாவட்டங்கள் சில இதுவரை சரணடைந்துள்ளன. குறித்த தகவல்கள் ரஷ்யாவால் உறுதி செய்யப்பட்டாலும், உக்ரைன் தரப்பில் ஏற்றுக்கொள்ளாமல் உள்ளனர். அது மட்டுமின்றி, உக்ரைன் மக்கள் தெருக்களில் இறங்கி, ரஷ்ய துருப்புகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்கும் வகையில், ரஷ்ய துருப்புகளால் கைப்பற்றும் உக்ரைன் நகர மக்களை பொதுவெளியில் தூக்கிலிடும் கொடூர திட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தை ரஷ்ய பாதுகாப்புத்துறை நிபுணர்கள், எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ரஷ்ய படையெடுப்பை துணிந்து எதிர்த்துவரும் உக்ரைன் மக்களின் மன உறுதியை இத்திட்டம் குலைக்கும் என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக கூறப்படுகிறது.
விளாடிமிர் புட்டினின் படையெடுப்பின் எட்டாம் நாள், ரஷ்ய துருப்புக்கள் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்திற்கு அடுத்துள்ள நகரத்தில் டாங்கிகளுடன் நுழைந்த பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அதேசமயம் உக்ரைன் துருப்புகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதன் காரணமாகவே , உயிர்ப்பலி அதிகரித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் (Vladimir Putin) குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையிலேயே அணுமின் நிலையத்திற்கு அடுத்துள்ள நகரத்தில் ரஷ்ய துருப்புகள் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அப்பாவி மக்களை பொது வெளியில் தூக்கிலிடும், ரஷ்யாவின் கொடூர திட்டம் தொடர்பில் தகவல் வெளியான நிலையில் அப்பாவி உக்ரைன் பொதுமக்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.