வயது வந்த அனைவருக்கும் மே மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி: இரண்டு கனேடிய மாகாணங்கள் முடிவு
மே மாதத்தில், வயது வந்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவது என கனேடிய மாகாணங்களான கியூபெக்கும் ஒன்ராறியோவும் முடிவு செய்துள்ளன.
வயது வரம்பின்றி, மே 14ஆம் திகதி முதல், வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது என கியூபெக்கும், மே 24 முதல், அதேபோல், வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது என ஒன்ராறியோவும் முடிவு செய்துள்ளன.
இன்று முதல் தடுப்பூசிக்காக அப்பாயிண்ட்மெண்ட் வழங்கத் துவங்கியுள்ள கியூபெக், முதலில் 50 முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கும், மே 14 அன்று 18 முதல் 24 வயது வரையுள்ளவர்களுக்கும் அப்பாயிண்ட்மெண்ட் வழங்க உள்ளது.
ஒன்ராறியோவில் இன்று 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு துவங்கி, வாரம் ஒன்றுக்கு பத்து பத்து வயதாக குறைத்து, மே 24 ஆகும் நிலையில், அனைத்து வயது வந்தவர்களுக்கும் தடுப்பூசி போட அப்பாயின்ண்ட்மெண்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில், மே மாதம் முடிவதற்குள் அனைத்து வயது வந்தோருக்கும் தடுப்பூசி போட்டுவிடுவது என களமிறங்கியுள்ளன இந்த இரண்டு கனேடிய மாகாணங்களும்.