சஹாரா பாலைவனத்தில் 450 நாட்கள் சிறைவைக்கப்பட்ட கனேடிய பெண்: வெளிவரும் பகீர் பின்னணி
கியூபெக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாத கும்பலால் ஓராண்டுக்கும் மேலாக மேற்கு ஆப்ரிக்காவில் சிறைவைக்கப்பட்டிருந்த சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.
தற்போது 37 வயதாகும் Edith Blais என்பவரே சஹாரா பாலைவனத்தின் கொளுத்தும் வெயிலில் சிறைவைக்கப்பட்டிருந்தவர். Edith Blais மற்றும் இவர் முன்னள் காதலர் Luca Tacchetto ஆகிய இருவரும் ஆப்ரிக்காவை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு அமைந்ததால் தங்கள் காரிலேயே புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்தே ஆப்ரிக்காவுக்கு பயணப்பட்டுள்ளனர். ஆனால், இந்த தம்பதி செய்த மிகப்பெரிய தவறு ஒன்று அவர்கள் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போட்டது.
ஆப்ரிக்கா செல்லும் வழியில் அமைந்துள்ள Burkina Faso தொடர்பில் இவர்கள் தெரிந்து கொள்ளாமல் பயணப்பட்டுள்ளனர். திடீரென்று ஆயுததாரிகளான 6 பேர்கள் இவர்கள் வாகனத்தை வழிமறித்ததுடன், அந்த நபர்கள் இவர்கள் இருவரையும் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
முதல் மூன்று மாதங்கள் Tacchetto உடனையே Blais தங்கவைக்கப்பட்டுள்ளார். ஆனால் தங்களை விடுவிக்க வலியுறுத்தி இவர்கள் இருவரும் 25 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இருவரையும் தனித்தனியாக தங்க வைத்துள்ளனர்.
மட்டுமின்றி, உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் தண்டனையாக வெறும் தண்ணீர் மட்டுமே உணவாக அளித்துள்ளனர்.
இதனிடையே, Tacchetto பலமுறை தப்பிக்க முயன்று, கொடூர தண்டனைக்கும் இலக்காகியுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளால் தாம் எந்த துஸ்பிரயோகத்திற்கும் இலக்காகவில்லை என குறிப்பிட்டுள்ள Blais, ஆனால் தனிமையில் பல மாதங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தது கொடுமையான நினைவுகள் என்றார்.
இறுதியில், பலத்த காற்று வீசிய ஒரு நாள் இருவரும் வாய்ப்பை ஏற்படுத்தி தப்பியுள்ளனர்.
இந்த நிலையில் 450 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு 2020 மார்ச் மாதம் Blais கனடாவுக்கு திரும்பியுள்ளார்.
தற்போது தாம் அனுபவித்த அந்த 450 நாட்கள் சிறைவாசம் தொடர்பில் Blais புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.