தந்தையை நினைத்து உருகிய ராகுல்காந்தி!
மன்னிப்பதற்கான மதிப்பை கற்றுக்கொடுத்தவர் எனது தந்தை என ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு வருகை தந்த போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அவரது 31 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நீலகிரியில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நீலகிரி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உதகை பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது தந்தை குறித்து ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது.
அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தையாக இருந்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எனது தந்தை மன்னிப்பு மற்றும் அனுதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்துள்ளார். நான் அவரை மிகவும் இழக்கிறேன்.
நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்” என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
My father was a visionary leader whose policies helped shape modern India.
— Rahul Gandhi (@RahulGandhi) May 21, 2022
He was a compassionate & kind man, and a wonderful father to me and Priyanka, who taught us the value of forgiveness and empathy.
I dearly miss him and fondly remember the time we spent together. pic.twitter.com/jjiLl8BpMs