ஏழை நாடுகளுக்காக கனடாவின் கவனத்தை ஈர்க்கும் திட்டம்
இதுவரை ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி கூட சென்றடையாத ஏழை நாடுகளுக்காக கனடா நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
குறித்த நடவடிக்கையின் முதற்கட்டமாக சுமார் 18 மில்லியன் டோஸ் ஆஸ்ட்ரா சென்கா தடுப்பூசிகளை நன்கொடையாக அளிக்க இருப்பதாகவும் கனேடிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால் கனேடிய மக்களுக்கு தேவையான எண்ணிக்கையில் தடுப்பூசிகளை இருப்பு வைத்துக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் கனடா முன்வரிசையில் உள்ளது.
ஆனால், உலகின் பல நாடுகளில் இந்த நிலை இல்லை என்பது கவலை அளிப்பதாக சமூக நலம் மற்றும் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதற்கட்டமாக 17.7 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை நன்கொடையாக அளிக்க கனடா முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும், ஆனால் எப்போதில் இருந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பதில் முடிவாகவில்லை என்றார்.