மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி; அழகி பட்டம் வென்ற ராஜஸ்தான் கல்லூரி மாணவி
ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் இந்தியா யுனிவர்ஸ் 2025ம் ஆண்டுக்கான அழகிப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இறுதி சுற்றின்போது, பெண் கல்விக்காக வாதிடுவது மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு பொருளாதார உதவி வழங்குதல் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியிருந்தால் நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள், ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “நான் பெண் கல்வி என்ற விருப்பத்தையே தேர்ந்தெடுப்பேன். இது ஒரு நபரின் வாழ்க்கையை மட்டும் மாற்றாது.
அது இந்த நாட்டின், இந்த உலகின் எதிர்காலத்தின் முழு அடுக்குகளையும் மாற்றும்” என பதில் அளித்தார்.
அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் படிப்பில் இறுதி ஆண்டு மாணவியான மணிகா, கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.