பிரான்ஸில் மீண்டும் தேர்தல்!
பிரான்ஸில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பதிவில் முதல் சுற்றில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) முதலிடத்தில் உள்ளார். எனினும் அவருக்கு 50 வீதத்துக்கும் மேல் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
பிரான்ஸ் தேர்தலில், முதல் சுற்று தேர்தலில் யாருக்கும் 50 வீதத்துக்கும் மேலான வாக்குகள் கிடைக்கவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்களுக்கு இடையே வரும் 24 ஆம் திகதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும்.
இரண்டாம் கட்டத் தேர்தல்லில் வெற்றி பெறுபவர் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பெறுப்பேற்பார். அந்த வகையில், வெற்றியாளர்களான இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) மற்றும் லு பென் (Le Pen) ஆகியோருக்கு பிரான்சை ஆளுவதற்கான பந்தயம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இரண்டு வாரங்களுக்குள் இரண்டாம் சுற்று வாக்களிப்பதற்கு முன், வேட்பாளர்களின் ஆதரவாளர்களை வெல்வதற்கான அவர்களின் பிரச்சாரங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரான்ஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன.