அமெரிக்காவில் குவியும் அகதிகள்...என்ன காரணம்?
அமெரிக்காவில் குடியேறும் நோக்கத்துடன் மெக்ஸிகோ அமெரிக்கா எல்லையில் நூற்றுக்கணக்கான அகதிகள் குவிந்து வருகின்றனர்.
தெற்கு மெக்சிகோ டாபசுலாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் மெக்சிகோ அரசின் அகதிகள் ஆணையத்தில் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ள காத்துக்கிடந்துள்ளனர்.
இந்த நிலையில் கால் நடையாக அமெரிக்கா எல்லையை அடைய அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்கள் அனைவரையும் டாபாசுலாவிலேயே வைக்க மெக்ஸிகோ தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவில் குடியேறும் நோக்கில் டாபாசுலாவில் மட்டும் சுமார் 90 ஆயிரம் அகதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.