இந்தியாவில் பிணத்தை புதைக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் உறவினர்கள்!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், சிகிச்சை பெற மருத்துவமனைகளில் இடம் தேட வேண்டியிருப்பதுடன், உடல்களைப் பெற பிணவறைகளிலும், அதன் பின்னர் எரிப்பதற்கு மயானத்திலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவலநிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து அதனை வெளிநாடுகளுக்கு விற்று காசு பார்க்கும் மோடி அரசு தன் சொந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம்.லட்சக் கணக்கில் இந்தியாவில் தயாராண தடுப்பு ஊசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்து தனது நாடு பெரும் வளர்சிகண்ட நாடு என காட்டிக் கொண்டார் பிரதமர் மோடி.
ஆனால் இன்று உலகிலேயே தொற்று அதிகம் உள்ள நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஏழை எழிய மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க மறுப்பதாகவும் , ஆனால் செல்வந்தர்கள் அரச ஊழியர்கள், நடுத்தர வர்கத்தினர், அரசியல்வாதிகளுக்கு தடுப்பூசி கிடைக்கிறதாகவும் கூறப்படுகின்றது.