10 வயது கனேடிய சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்: கண்ணீரில் மொத்த குடும்பம்
வாகன் பகுதியில் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த 10 வயது சிறுமி தொடர்பில் அவரது பெற்றோர் நெஞ்சைப் பிசையும் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
யார்க் பிராந்திய பொலிசார் ஊடாக வெளியிடப்பட்ட அந்த இரங்கல் அறிக்கையில், சிறுமி நிகிதாவின் இழப்பு தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும், அந்த நிகழ்வு நெஞ்சை உலுக்குவதாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சிறுமி நிகிதா தங்களின் அன்பு மகள், சகோதரி மற்றும் பேத்தி என அதில் குறிப்பிட்டுள்ளனர். பழக்கத்திற்கு மிகவும் இனிமையானவள் என சிறுமி நிகிதா தொடர்பில் குறிப்பிட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள்,
குடும்பத்தில் மட்டுமல்ல, உறவினர்களின் நெஞ்சைத்தொடும் அளவுக்கு அவரது நடவடிக்கை இந்த கொஞ்ச காலத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், சிறுமி நிகிதா தமது மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது, 33 வயதான ஒருவர் தமது வாகனத்தை மோதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் அடுத்த நாள், வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி சிறுமி நிகிதா மரணமடைந்ததாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே சிறுமி நிகிதாவின் இறுதிச்சடங்குகள் ஞாயிறன்று மதியம் 2 மணிக்கு முன்னெடுக்கப்படும் எனவும், இறுதி அஞ்சலி செலுத்த விருப்பம் உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என குடும்பத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி நிகிதாவின் மரணத்திற்கு காரணமான சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த 33 வயது சாரதி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.