ரஷ்யா தொடர்பில் சீனாவிடம் முன்வைத்த கோரிக்கை!
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தொடுத்தது.
ஏறத்தாழ மூன்று மாதங்களாக நீடிக்கும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் சர்வதேச அளவில் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்களை வெளியே எடுத்து செல்ல முடியாதபடி ரஷ்யா கடல்வழியை தடுத்துள்ளது. உலக நாடுகள் தலையிட்டு ரஷ்ய தடுப்புகளை நீக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைனில் நடக்கும் போர், ஏழை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டுவதாக ஜி7 கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும் உக்ரைனை விட்டு தானியங்கள் வெளியேறுவதை ரஷ்யா தடுப்பதாகவும், இதை சரி செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை என்றும் ஜி7 அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச தடைகளை குறைத்து மதிப்பிடுவது அல்லது உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உட்பட எந்த வகையிலும் ரஷ்யாவிற்கு உதவ வேண்டாம் என்று சீனாவை ஜி7 நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.