இடுப்பளவு சகதிக்குள் சிக்கிய நபர்: போராடிய மீட்புக்குழுவினர்
பீற்றர்பரோ பகுதியில் அகழியில் சிக்கொண்ட நபரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
பிரியோக்ஸ் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து மதியம் 2 மணியளவில் பீற்றர்பரோ தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் சென்றுள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழுவினர், இடுப்பளவு சகதியில் அகழிக்குள் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளதை கண்டுள்ளனர்.
தொடர்ந்து 15 பேர்கள் கொண்ட குழு சுமார் ஒரு மணி நேரம் போராடிய பின்னர் குறித்த நபரை மீட்டுள்ளனர். மட்டுமின்றி, பாதிக்கு மேல் சிதைந்து போயிருந்த அகழியானது மேலும், சேதமடையாமல் இருக்க, அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நபரை மருத்துவ பரிசோதனைகளுக்காக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.