கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக எனது முதல் பணி இதுதான்: அனிதா ஆனந்த் வெளிப்படை
கனேடிய இராணுவத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் எழுந்த புகாரில் நீதியை நிலைநாட்டுவதே தமது முதல் பணி என புதிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கனேடிய இராணுவத்திற்குள் தற்போதிருக்கும் கலாச்சாரத்தை மாற்றுவதற்கான தனது முயற்சியில் தாம் இடைவிடாமல் ஈடுபடப்போவதாகவும், அதனால் சீருடையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக உணருவார்கள் எனவும் அமைச்சர் அனிதா ஆனந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுதப் படைகளில் உள்ள அனைவரும் பாதுகாப்பாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் உணர்கிறார்கள் என்பதையும், அவர்களுக்குத் தேவைப்படும்போது அவர்களுக்குத் தேவையான ஆதரவையும், நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான இடங்களில் முன்னுரிமையையும் உறுதிசெய்வதே எனது முதன்மையான பணி என அமைச்சர் அனிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் ட்ரூடோவின் இரண்டாவது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு வகித்த ஹர்ஜித் சஜ்ஜன் தற்போது சர்வதேச வளர்ச்சித்துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
கனேடிய இராணுவத்தில் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக எழுந்த பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை கையாண்ட விதம் மற்றும் போதுமான மாற்றங்களைச் செய்ய இயலாமைக்காகவும் சஜ்ஜன் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.