இந்தியாவில் இருந்து உடனே நாடு திரும்புங்கள்; எச்சரிக்கை விடுத்த நாடு!
இந்தியாவில் இருக்கும் தமது பிரஜைகளை உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அத்துடன் அங்கு பல இடங்களில் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்தன. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,79,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பய்ட்டதுடன் தொற்றுக்கு 3,645 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து அமெரிக்கா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதில், 'இந்தியாவில் தற்போது கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதால், யாரும் இந்தியா செல்ல வேண்டாம். அங்கு இருப்பவர்களும் உடனடியாக நாடு திரும்புவது நல்லது' என கூறியுள்ளது.