பிரித்தானிய பிரதமர் தேர்தலில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய ரிஷி சுனக்!
பிரித்தானியாவின் முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் (Rishi Sunak) பிரதமர் தேர்தலில் 4 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் (Boris Johnson) விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் பிரித்தானிய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.
புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.
இதற்கிடையே, இரு சுற்றுகளாக நடந்த வாக்குப்பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் பிரித்தானிய முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் 4 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.