பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரிப்பு
பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரித்துள்ளதாக நேஷன்வையிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதன்படி சராசரி மதிப்பு 231,068 பவுண்டுகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த விலையை விட 6.9 சதவீத உயர்வை கண்டுள்ளது. இது ஜனவரி மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் ‘இந்த அதிகரிப்பு ஒரு ஆச்சரியம்’ என்று நேஷன்வைட்டின் ரோபர்ட் கார்ட்னர் கூறினார். ஏனெனில் முத்திரை வரி விடுமுறை முடிவடைவதற்கு முன்பே விலை வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த விடுமுறை மார்ச் 31ஆம் திகதி முடிவடைய உள்ளது, இருப்பினும் அது நீடிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்தன.
முத்திரை வரி விடுமுறை என்பது ஜூலை முதல் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள அனைத்து சொத்து விற்பனையிலும் முதல், 500,000 பவுண்டுகள் வரி நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த வார வரவு செலவு திட்டத்தில் முத்திரை கட்டணத்தில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வரலாம் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.