அழிந்துவிடும் அபாயத்தில் 30 சதவீத உயிரினங்கள்!
ஒரு சர்வதேச பாதுகாப்பு அமைப்பால் மதிப்பிடப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் ஏறக்குறைய 30 சதவீதமானவை காலநிலை மாற்றாம் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக அழியும் அபாயத்தில் உள்ளதாக ஒரு புதிய அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட (IUCN) என்ற சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் சனிக்கிழமை அதன் வருடாந்திர "உயிரினங்களின் சிவப்புப் பட்டியலை" புதுப்பித்தது.
இந்த புதுப்பிப்பிலேயே காலநிலை மாற்றாம் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக 138,374 உயிரினங்களில் 38,543 அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதாக கூறியுள்ளது.
தகவல் அச்சமூட்டும் அதேவேளையில், மீன்பிடித்தல் காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளான பல வகையான டூனா மீன்கள் பாதுகாக்கப்படுவதற்கான அவசியத்தையும் அது எடுத்துரைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பல்லியான கொமோடோ டிராகன், பட்டியலில் அதிகம் பாதிக்கக்கூடிய உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த சிவப்பு பட்டியல் மதிப்பீடுகள் நம் வாழ்வும் வாழ்வாதாரமும் பல்லுயிரியலுடன் எவ்வளவு நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளது என்பதை வெளிக்காட்டியுள்ளன.