ரொறொன்ரோவில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
ரொறொன்ரோவில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மூன்று தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Robina Avenue மற்றும் St Clair Avenue West area பகுதிக்கு அவசரமாக அழைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பணியாளர்கள் ஏணியில் நின்று பணியாற்றியுள்ளனர். அப்போது திடீரென ஏணி மின் இணைப்புகளுடன் தொடர்பு கொண்டது. இதனால் அவர்கள் அனைவரும் மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டுக் கீழே விழுந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றொரு ஆணுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. மூன்றாவது ஆணுக்கு சிறு காயங்கள் உள்ளன என்று துணை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் தன்மை குறித்து வேறு விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.