நீதிமன்றில் ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டதால் பரபரப்பு!
இந்தியாவின் தலைநகர் டில்லியில், நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டில்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டில் ரவுடி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவருடன் மேலும் மூன்று பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அந்த்துடன் இந்த துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருதரப்பினருக்கிடையே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.