ரொறன்ரோவின் ராயல் யார்க் ரயில் நிலையத்தில் கோர சம்பவம்... பொலிஸ் குவிப்பால் பரபரப்பு
ரொறன்ரோவின் ராயல் யார்க் ரயில் நிலையத்தில் 30 வயது கடந்த ஒருவர் கத்தியால் பலமுறை தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாயன்று சுமார் 4 மணியளவில் குறித்த கோர சம்பவம் ராயல் யார்க் நிலையத்தில் அரங்கேறியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற ரொறன்ரோ பொலிசார் மற்றும் மருத்துவ அவசர உதவிக்குழுவினர், ஆபத்தான நிலையில் காணப்பட்ட அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து பொலிசார் குவிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. ரயில் நிலையத்தின் நடைபாதையிலேயே உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நபர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
உடல முழுவதும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டுள்ளது. அவரை தாக்கியவர் தொடர்பிலும், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தொடர்பிலும் பொலிசார் எந்த தகவலையும் வெளியிட மறுத்துள்ளனர்.
இருப்பினும், தகவல் அறியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை அணுக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி இலக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ரயில் சேவைகள் ராயல் யார்க் நிலையத்தில் தடைபட்டுள்ளதுடன், பேருந்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.