ரஷ்யா மீதான தடையால் கென்யாவில் ஏற்பட்ட நிலை!
உக்ரைன் மீதான் ரஷ்யாவின் போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதனால் ரஷ்யாவுடன் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சர்வதேச பணம் செலுத்துதல் அமைப்பு முறையில் இருந்து ரஷ்யாவை விலக்கி வைத்திருப்பதால், ரஷ்யாவுடன் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான கென்யாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக ரஷியா உள்ளது. கென்யாவில் இருந்து ஏஞ்ஜியா ரோஸ் உள்ளிட்ட பல்வேறு வகை மலர்கள் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் ரஷ்யாவின் மீதான பொருளாதார தடை காரணமாக கென்யாவில் உள்ள மலர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மலர் தொழிலை தவிர கென்யாவில் தேயிலை தொழிலும் பாதிப்பை சந்தித்துள்ளது.
கென்யாவின் தேயிலை உற்பத்தி அளவில் 5 சதவீத பங்கு ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு ரஷ்யா ஒரு பெரிய சந்தையாக கருதப்படுகிறது.
தற்போதைய சூழலில், கென்யாவில் ஆண்டுக்கு சுமார் 87 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதி வர்த்தகம் தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.