உக்ரைனில் குடிருப்பு கட்டிடங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய ரஷ்யா!
உக்ரைனில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷ்ய நடத்திய குண்டு வீசி தாக்குதலில் 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதியில் இருந்து போரை தொடுத்து வருகின்றது.
இவ்வாறான நிலையில், உக்ரைனில் உள்ள கோஸ்டியான்டினிவ்கா என்ற நகரத்தில் ரஷ்ய துருப்புக்கள் குண்டு வீசி தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்த தாக்குதலில் அந்நகரத்தில் உள்ள 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் குறித்த தாக்குதலில், 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமின்றி ரயில் நிலையங்கள், மார்கெட் மற்றும் தனியார் விடுதிகள் மீதும் ரஷ்ய துருப்புக்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.