இரு கப்பல்கள் மூலம் அணுசக்தி சோதனை நடத்திய ரஷ்யா; புன்னகைத்த புடின்!
பனிமலையை தகர்க்கக்கூடிய அணுசக்தி சோதனையை ரஷ்யா நடத்தியுள்ளது.
அணுசக்தியால் இயங்கும் இரண்டு கப்பல்கள் புனித பீட்டர்ஸ்பர்க்கில் இந்த சோதனையை மேற்கொண்டன.
இதன் மூலம் ஆர்க்டிக் பகுதியில் தனது பலத்தை ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது. இதற்கான நிகழ்வில் காணொலி வாயிலாக அதிபர் புடின்(Vladimir Putin) கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார்.
நாட்டுக்கு இத்தகைய பனி தகர்ப்பு சோதனைகள் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் யூரல் ஐஸ் பிரேக்கரில் ரஷ்ய தேசிய கீதத்துடன் ரஷ்ய கொடியை உயர்த்தியபோது புடின் (Vladimir Putin)புன்னகை புரிந்துள்ளார்.