ரஷ்யாவில் புதிதாக 684 பேர் கொரோனாவால் பலி!
ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38 ஆயிரத்து 850 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 684 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து ரஷ்யாவில் 1 கோடியே 9 இலட்சத்து 38 ஆயிரத்து 261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 இலட்சத்து 24 ஆயிரத்து 60 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
ரஷ்யாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 6 இலட்சத்து 63 ஆயிரத்து 868 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 478 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 99 இலட்சத்து 50 ஆயிரத்து 333 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.