உக்ரைனில் 300 பாலங்களை மொத்தமாக நொறுக்கிய ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் இதுவரை 300 பாலங்களை மொத்தமாக நொறுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 100 நாட்களை கடந்துள்ளது. உக்ரைனில் 20% நிலப்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
ஆனால் ரஷ்யா தரப்பில் 30,000 வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைன் உளவுத்துறை பட்டியலிட்டுள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 24ம் திகதிக்கு பின்னர் ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் 24,000 கி. மீ அளவுக்கு சாலைகளை சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, உக்ரைன் அரசின் கட்டுமான நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், ரஷ்ய துருப்புகளால் மொத்தம் 300 பாலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற களமிறங்கிய ரஷ்ய துருப்புகள், 100 நாட்களுக்கு பின்னரும் உக்ரைனில் போரிட்டு வருகிறது.
புச்சா உள்ளிட்ட குறிப்பிட்ட நகரங்களை ரஷ்யா கட்டுப்பாட்டில் கொண்டுவந்தாலும், தற்போது டான்பாஸ் பகுதிக்கு குறிவைத்து உக்கிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.